TamilsGuide

அயர்லாந்தின் 3-வது பெண் அதிபராக பதவியேற்ற கேத்தரின்

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் இடதுசாரியான கேத்தரின் கோனொலி (வயது 68) சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார்.

அவருக்கு அங்குள்ள இடதுசாரி கட்சிகளான சின் பெயின், தொழிலாளர் கட்சி மற்றும் சமூக ஜனநாயக கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்தன.

இந்த தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவிலேயே அவர் 63 சதவீதம் வாக்குகளை பெற்றார். எனவே அவர் அபார வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்சே தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

அதிபராக தேர்வான கேத்தரின் 1997-ம் ஆண்டு தொழிலாளர் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினாா். 2006-ம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த கட்சியில் இருந்து விலகி சுயேச்சை வேட்பாளராக தொடர்ந்தார். மேலும் இஸ்ரேல்-காசா போரில் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்ததன் மூலம் சர்வதேச அளவில் அவர் கவனம் பெற்றார்.

இந்தநிலையில் தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார். அவரது பதவியேற்பு விழா அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதன்மூலம் நாட்டின் 10-வது மற்றும் மூன்றாவது பெண் அதிபராக அவர் பதவியேற்றார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a comment

Comment