TamilsGuide

மருந்துகளை அதிகம் செலுத்தி 10 நோயாளிகளைக் கொன்ற ஜெர்மன் செவிலியர் - வெளியான பகீர் தகவல்

ஜெர்மனியில், 10 நோயாளிகளைக் கொலை செய்த மற்றும் மேலும் 27 பேரைக் கொலை செய்ய முயன்ற குற்றங்களுக்காக ஒரு பாலீயேட்டிவ் கேர் செவிலியருக்கு (Palliative Care Nurse) ஜெர்மன் நீதிமன்றம் நேற்றைய தினம் (5) ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஆசென் (Aachen) நகரில் உள்ள நீதிமன்றம், 44 வயதான அந்த ஆண் செவிலியர், 2023 டிசம்பர் முதல் 2024 மே வரை ஆசென் அருகிலுள்ள வுயர்செலன் (Wuerselen) நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த குற்றங்களைச் செய்ததை உறுதி செய்தது.

இரவு நேரப் பணிச் சுமையைக் குறைக்கும் எளிய நோக்கத்துடன், வயதான நோயாளிகளுக்கு மயக்க மருந்து அல்லது வலி நிவாரணி மருந்துகளை அதிக அளவில் செலுத்தி அவர் இந்தக் குற்றங்களைப் புரிந்துள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இந்தக் குற்றங்கள் குறிப்பிட்ட தீவிரமான குற்றவுணர்வை” (particular severity of guilt) கொண்டுள்ளன என்று நீதிமன்றம் தீர்மானித்தது.

இதனால், இதுபோன்ற வழக்குகளில் பொதுவாக வழங்கப்படும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முன் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 85 நோயாளிகளைக் கொன்ற குற்றத்திற்காக 2019-இல் ஆயுள் தண்டனை பெற்ற செவிலியர் நீல்ஸ் ஹோகல் (Niels Hoegel), நவீன ஜெர்மனியின் மிகவும் கொடூரமான தொடர் கொலையாளி என்று கருதப்படுகிறார்.

இந்தச் சமீபத்திய தீர்ப்பு, மருத்துவத் துறையில் உள்ள சிலரின் துஷ்பிரயோகங்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களால் நிகழ்த்தப்படும் இதுபோன்ற தொடர் கொலைகள் ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


 

Leave a comment

Comment