TamilsGuide

மெக்சிகோவுடனான தூதரக உறவை துண்டித்த பெரு

பெரு நாட்டின் முன்னாள் பிரதமர் பெட்சி சாவேஸ். இவர்மீது ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதற்கிடையே அவருக்கு மெக்சிகோ அடைக்கலம் அளித்தது. இதனால் மெக்சிகோ உடனான தூதரக உறவை துண்டிப்பதாக பெரு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பெருவின் வெளியுறவு மந்திரி ஹ்யூகோ டி ஜெலா கூறுகையில், முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் ஒரு பகுதியாக செயல்பட்ட முன்னாள் பிரதமர் பெட்சி சாவேசுக்கு பெருவில் உள்ள மெக்சிகோ தூதரகத்தின் இல்லத்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதை நாங்கள் ஆச்சரியத்துடனும், ஆழ்ந்த வருத்தத்துடனும் அறிந்தோம் என தெரிவித்தார்.
 

Leave a comment

Comment