TamilsGuide

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து மூவர் காயம்

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்று (29) காலை இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்களின் கால்களில் காயம ஏற்பட்டு மூவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் இந்த நாட்களில் நடைபெறும் இராணுவப் பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
 

Leave a comment

Comment