அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த “ரஜரட்ட ரெஜிண” எனும் புகையிரதத்தின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, தீ விபத்து புகையிரதத்தின் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ளது என்றும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .
இதனைத் தொடர்ந்து, புகையிரதம் மீண்டும் அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அதற்கு வேறு ஒரு என்ஜின் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்தது.
இன்று (25) காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து புறப்படவிருந்த ரஜரட்ட ரெஜிண புகையிரத்திலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக, அந்த புகையிரதம் புறப்படுவது 2 மணித்தியாலங்களுக்கு மேல் தாமதமானதுடன், காலை 7.30 மணியளவில் மீண்டும் பெலியத்தையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.


