TamilsGuide

ரஷியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உருவாகும் புதின்-டிரம்ப்' சுரங்கப்பாதை? - உக்ரைன் அதிருப்தி

ரஷியாவுக்கும் அமேரிக்காவின் அலாஸ்காவுக்கும் இடையே பேரிங் ஜலசந்தி அமைந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவையும் ரஷியாவையும் இணைக்கும் வகையில், பேரிங் ஜலசந்திக்கு அடியில் 'புதின் -டிரம்ப்' ரெயில் சுரங்கப்பாதையைக் கட்ட ரஷியாவின் தூதர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.

ரஷிய அதிபர் புதினின் முதலீட்டுத் தூதரும், தேசிய செல்வ நிதியத்தின் தலைவருமான கிரில் டிமிட்ரிவ் இந்த சுரங்கப்பாதை யோசனையை முன்வைத்தார்.

இது இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமையின் சின்னமாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரெயில்கள் செல்ல ஏதுவாக 112 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப்பாதையை கட்ட சுமார் 8 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்றும், இதை எட்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கலாம் என்றும் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் சுரங்கப்பாதையை அமெரிக்க கோடீஸ்வரர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான சுரங்கம் அமைக்கும் நிறுவனமான 'தி போரிங் கம்பெனி' மூலம் அமைக்கலாம் என்று கிரில் டிமிட்ரிவ் தனது சமூக ஊடகத்தில் பரிந்துரைத்துள்ளார்.

ரஷிய தூதரின் இந்த கருத்து குறித்த என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "ரஷியாவில் இருந்து அலாஸ்காவிற்கு ஒரு சுரங்கப்பாதை!.. இதைப் பற்றி இப்போதுதான் கேள்விப்பட்டேன். இது சுவாரஸ்யமான யோசனை. இதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்" என்று கூறினார்.

அதேசமயம் நேற்று போர் நிறுத்தம் குறித்து வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் சந்திப்பின்போது, இந்த யோசனை குறித்து டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் கேட்டார்.

அதற்கு ஜெலென்ஸ்கி, "இந்த யோசனையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை" என்று பதிலளித்தார்.

அடுத்த இரண்டு வாரங்களில் உக்ரைன் போர் நிறுத்தம் ரஷிய அதிபர் புதினை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் சந்திக்க உள்ளதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில் இந்த 'புதின்-டிரம்ப் சுரங்கப்பாதை' குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 
 

Leave a comment

Comment