அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று நேரில் சென்று சந்தித்தார். 4 வருடங்களாக தொடரும் உக்ரைன்-ரஷியா போருக்கு தீர்வு காணவும் அடுத்க்கப்பட்ட நடவைடிக்கை குறித்தும் பேசுவரத்தை நடத்தினர். இந்த சந்திப்புக்கு முன்னதாக ரஷிய அதிபர் புதின் உடனும் டிரம்ப் போனில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
உக்ரைன் அதிபர் சந்திப்புக்கு பின் உக்ரைன் போர் நிலைமை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டார்.
அதில், உக்ரைன் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்றும், இரு நாடுகளும் வெற்றியை அறிவிக்க வேண்டும், ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டிய நேரம் இது என்று நான் ஜெலென்ஸ்கியிடம் சொன்னேன். அதையே புதினுக்கும் நான் பரிந்துரைத்தேன். இரு நாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொள்ள வேண்டும்.
இனி துப்பாக்கிச் சூடு வேண்டாம், இனி மரணங்கள் வேண்டாம், தேவையற்ற பெரிய செலவுகள் வேண்டாம். அப்போது நான் அதிபராக இருந்திருந்தால், இந்தப் போர் தொடங்கியிருக்காது" என்று தெரிவித்தார்.
மேலும் டிரம்ப் உடனான சந்திப்பில் 2,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய டோமாஹாக் ஏவுகணைகள் தங்களுக்கு நிச்சயமாகத் தேவை என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். ஆனால் அதை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது என்று தான் நம்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்னும் 2 வாரங்களுக்குள் அதிபர் புதினை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


