TamilsGuide

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 13 உழவு இயந்திரங்கள் பறிமுதல்

மட்டக்களப்பு – கரடியனாறு கித்துள்ள பிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்று கொண்டிருந்த பதின்மூன்று உழவு இயந்திரங்களை அரந்தலாவ பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் உழவு இயந்திரங்களின் சாரதிகள் பதின்மூன்று பேர் கைதுசெய்யகப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அரந்தலாவ பொலிஸ் அதிரடிப்படையினர் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகளும் கரடியனாறு பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இந்த சட்டவிரோத மணல் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி ஏறாவூர் நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 

Leave a comment

Comment