சுமார் 10 வருடங்களை ரீவைட் செய்து பார்த்தால் நடிகை காம்னா ஜேத்மாலினியை தமிழ், கன்னடம், தெலுங்கில் வெளிவந்த படங்களில் காணலாம்.
குறிப்பாக ஜெயம் ரவியின் இதயத்திருடன் படத்தின் ஹீரோயினாக ஜேத்மாலினியை தமிழ் ரசிகர்கள் அடையாளம் காணக்கூடும்.
கடந்த 2014 இல் தொழிலதிபரை திருமணம் செய்ததில் இருந்து காம்னா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
2015 இல் சந்திரிகா என்ற படத்திற்கு பிறகு மகள்களை வளர்க்க வேண்டி அவரின் திரை வாழ்க்கை நின்றுபோனது.
இந்நிலையில் 10 வருடங்கள் கழித்து 2025 இல் தெலுங்கு படம் மூலம் காம்னா மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்
தெலுங்கில் உருவாகி உள்ள "கேராம்ப்" படத்தில் காம்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற 18-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.


