ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஷெல்ஹார்பர் விமான நிலையத்தில் இருந்து ஒரு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் தரையில் மோதியது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 3 பேர் பலியானார்கள். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


