ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) கூட்டு அரசியல் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தை அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, SJB செயற்குழுவும் நிர்வாகக் குழுவும் பொதுவான கொள்கை கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கான கூட்டு உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த முயற்சி, நாட்டையும் அதன் மக்களையும் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு நடைமுறை, ஜனநாயக, முற்போக்கான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரு தரப்பினரும் தங்கள் அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்வதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒத்துழைக்க செயற்குழு முதல் முறையாக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தொடர்கிறார் என்றும், தலைமைத்துவம் குறித்து எந்த சர்ச்சையும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த ஒன்றுபட்ட அரசியல் பயணத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமட்ட உறுப்பினர்கள் தங்கள்ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


