முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக ரோஹித அபேகுணவர்தன தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாததாக்குமாறு கோரி ராஜித சேனாரத்ன தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (30) வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரின் சமர்ப்பிப்புகளை மீளாய்வு செய்த பின்னர், மனுவை நிராகரித்து நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டது.


