TamilsGuide

பிரசன்ன ரணவீரவுக்கு பிணை

அரசுக்கு சொந்தமான காணியை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்று (30) கம்பஹா மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரசன்ன ரணவீர சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலனை செய்த கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி, பிரசன்ன ரணவீர மற்றும் சரத் எதிரிசிங்க ஆகிய இரு சந்தேக நபர்களையும் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்டார்.

அதன்படி, ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் ஒரு ரொக்கப் பிணை மற்றும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் ஐந்து சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அத்துடன்,சந்தேக நபர்களின் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும்,சந்தேக நபர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடிப் பிரிவில் முன்னிலையாகி  கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment