தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
நடிகர் அஜித்குமார் ரேஸிங் அணி ஸ்பெயினில் நடைபெற்ற க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் கலந்து கொண்டது.
இந்நிலையில், க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி 3ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.


