TamilsGuide

H-1B விசா விவகாரம் - அமெரிக்காவில் படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது.

இந்த புதிய உத்தரவு இன்று (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவில் தற்போதைய விசாவில் படித்து வரும் மாணவர்கள் தங்களது படிப்பை எந்தவித இடையூறும் இல்லாமல் முடித்து கொள்ளலாம். ஆனால் படிப்பை முடித்த பிறகும் அவர்கள் சிக்கல்களை சந்திக்கலாம்.

படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் எச்-1பி விசாவின் கீழ் பணிபுரிய 1 லட்சம் டாலர்கள் (ரூ.88 லட்சம்) கட்டண உயர்வை செலுத்த வேண்டும். இதனால் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதை குறைக்கும் என்று கூறப்படுகிறது. 

Leave a comment

Comment