2025 செப்டம்பர் மாதத்தின் முதல் 2 வாரங்களில் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75,358 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) அறிவித்துள்ளது.
SLTDA வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 21,389 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
இது 28.4% ஆகும்.
மேலும், செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்திலிருந்து 5,714 பேர், ஜெர்மனியிலிருந்து 4,817 பேர், சீனாவிலிருந்து 4,056 பேர் மற்றும் பிரெஞ்சு நாட்டினர் 3,834 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையில், செப்டம்பர் மாதத்திற்கான அண்மைய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,641,881 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், இந்தியாவிலிருந்து 346,984 பேர், இங்கிலாந்திலிருந்து 156,855 பேர் மற்றும் ரஷ்யாவிலிருந்து 120,314 பேர் என்று SLTDA குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 198,235 வெளிநாட்டினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இது ஆகஸ்ட் 2024 தரவுகளுடன் ஒப்பிடுகையில் 20.4% அதிகமாகும்.


