திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
நான் அதிசய மனிதர்களை இதிகாசங்களிலும், புராணங்களிலும் படித்திருக்கிறேன்.
நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜாதான்.
நம் உலகம் வேறு ராஜாவின் உலகம் வேறு.
இப்ப கூட அவருடைய பாடல்கள் சினிமாவுல போட்டால் சூப்பர் ஹிட் ஆகிறது.
எவ்வளவோ இழப்புகளைச் சந்தித்தபோதும் ராஜாவிடம் சலனம் இல்லை.
ராகங்களை அள்ளிக்கொடுப்பவர் ராஜா. நான் அவரை சாமி என்றே அழைப்பேன்.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் நாடி, ரத்தம், உயிர் ராஜா. ராஜாவுடனான நட்பு எனக்கு பெரும் பாக்கியம் என தெரிவித்தார்.


