TamilsGuide

நான் உள்ளே துடிக்க, நீ வெளியே தப்பிக்கிறாய்…- ஜாய் கிரிசில்டா பதிவு

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து, அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும், முதல் மனைவியைப் பிரியாமலேயே, ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக கூறப்படுவது தான் இந்தச் சர்ச்சைகளின் ஆரம்பம்.

ஜாய் கிரிசில்டா இது தொடர்பாக நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜாய், ரங்கராஜ் தனக்குக் கடன் இருப்பதாகவும், கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்னதாகவும் முன்னர் பேட்டிகளில் ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜுவுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை ஜாய் கிரிசில்டா அவ்வபோது தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜூடன் இருக்கும் புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு ஜாய் கிரிசில்டா கூறியிருப்பதாவது:-

"கருவிலே உயிர் உருவாகும் போது, உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது."

நான் உள்ளே துடிக்க

நீ வெளியே தப்பிக்கிறாய்…

இதுதானா உன் அன்பு அறிமுகம்….???? என்று கூறியுள்ளார். 
 

Leave a comment

Comment