TamilsGuide

வான விளக்குகளை பறக்கவிடுவது குறித்து பொலிசாரின் விசேட அறிவித்தல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளில் போது, ​​விநோதமான பறக்கும் விளக்குளைப் பறக்கவிடுவது குறித்தும் , அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.

காற்று நிரப்பப்பட்டு வெப்பத்தால் மேல்நோக்கி பறக்கும் எரியும் தீபந்தகளுடன் கூடிய பல்வேறு அளவிலான விளக்குகள் வானில் பறக்கவிடப்படுவதுடன், இந்த விளக்குகள் சில சந்தர்ப்பங்களில் தீப்பிடித்து பட்டாசு தொழிற்சாலைகள், பெட்ரோல் நிலையங்கள், எரிபொருள் சேமிப்பு பகுதிகள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் போன்றவற்றில் விழுந்தால், அந்த இடங்களுடன், உயிர்களுக்கும் பாரிய சேதம் ஏற்படலாம் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

கொழும்பில் உள்ள காலி முகத்திடல் சதுக்கத்திலும் இந்த முறையில் விளக்குகளை ஏற்றுவதை பொலிஸார் அவதானித்துள்ளதுடன் , இதுபோன்ற பறக்கும் விளக்குகள் தீப்பிடித்து நகரத்தில் உள்ள முக்கிய இடங்கள் அல்லது குடியிருப்பு பகுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் விழுந்து, ஏதேனும் வழியில் தீப்பரவல் ஏற்பட்டால், பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்பை ஏற்படும் அபாயம் அதிகம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, வான விளக்குகளைப் பறக்கவிடும் போது அதன் பரவல் மற்றும் ஆபத்தான நிலைமைகள் குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் முறையைப் பின்பற்றுவதன் மூலம், உயிர் மற்றும் சொத்து இழப்பைத் தடுக்கும் வாய்ப்பு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த வான விளக்குகளைப் பறக்கவிடும் போது ஏற்படக்கூடிய ஆபத்தான சூழ்நிலை குறித்து அறிந்து விசேட சந்தர்ப்பங்கள் உட்பட வான விளக்குகளைப் பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுமாறு பொலிஸார், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
 

Leave a comment

Comment