TamilsGuide

அரசியலை தாண்டி எல்லோரும் எல்லாவற்றையும் மதிக்க வேண்டும்- விஜய்யின் விமர்சனம் குறித்து நடிகர் சூரி கருத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நடிகர் சூரி தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தார். கோவிலை விட்டு வெளியே வந்த அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து செல்பி எடுத்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்று எனக்கும், என் தம்பிக்கும் பிறந்தநாள். ராமன், லட்சுமணனாக நானும் என் தம்பியும் இரட்டை பிறவிகள். ராமன் என்ற பெயர் சூரியாக மாறியிருக்கிறது. எனது உணவகம் வளர்ச்சிக்கு சூரி என்று சொல்வார்கள். ஆனால் எனது தம்பிகள், அண்ணன்கள் தான் முழு காரணம், அதுவே எனக்கு பெருமை.

மாமன் படப்பிடிப்புக்கு பிறகு அடுத்த படம் மண்டாடி படம் பிடிப்பு நடைபெற்று வருகிறது. வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு எப்படியோ அதேபோல் கடலில் போட் ரேசிங் கடலில் வீர விளையாட்டான மண்டாடி படம் வரும்போது நிறைய விஷயம் தெரிய வரும்.

திரைப்படத்தில் காமெடி நடிகர்கள் குறைந்து வருகிறார்கள். திரையில் காமெடிகள் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து எல்லோரும் வர வேண்டும், அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கீங்க, நல்லா வந்திருக்கேன். அதே போல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள்.

மதுரையில் நடந்த த.வெ.க. மாநாட்டில் அதன் தலைவர், தமிழக முதலமைச்சர் குறித்த விமர்சனங்களை தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் கூற விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லோரும் வேண்டும். நல்லவிதமாக அரசியலை தாண்டி எல்லாரும் எல்லாவற்றையும் மதிக்க வேண்டும்.

இன்றைக்கு விஜய் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றிருக்கிறார். அடுத்து திரும்பி வரலாம். அனைவருக்கும் விஜய்யை பிடிக்கும், எனக்கும் அவரை பிடிக்கும். அவர் அரசியலுக்கு சென்றது அவரது விருப்பம் என்றார்.
 

Leave a comment

Comment