TamilsGuide

யாழில் படகு விபத்து - மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் உடப்பு பகுதியைச் சேர்ந்த மைனர் சம்மாட்டியின் கரைவலை வாடியில் நேற்று கரவலை மீன்பிடி நடவடிக்கை இடம் பெற்றது.

இதன் போது மீன்படி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த இளைஞர் கடலின் அலையில் இருந்து படகை விடுவிப்பதற்கு முயன்ற போது அதே படகு அலையில் சிக்குண்டு குறித்த இளைஞன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் உடப்பு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சின்னத்தம்பி சசிதரன் என்று தெரிவிக்கப்படுகிறது.
சடலம் நித்தியவெட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment