TamilsGuide

நீதிமன்ற வளாக போராட்டத்தில் பொலிஸ் அதிகாரி காயம்

கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (26) பிற்பகல் எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவர் வீசியதாகக் கூறப்படும் பொருள் தாக்கப்பட்டதில் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு வெளியே ஆதரவாளர்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதனிடையே, வழக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது சிகிச்சை பெற்று வரும் தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, ஜூம் செயலி மூலம் நீதிமன்ற அமர்வில் முன்னிலையாகியுள்ளார்.
 

Leave a comment

Comment