நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.
இந்நிலையில் இந்த தொடக்க விழா பணிகளை ரவி மோகன் கடந்த சில வாரங்களாக செய்து வருகிறார். தொடக்க விழா தற்போது மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்று வருகிறது.
விழாவிற்கு பல திரைப்பிரபலங்கள் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி நட்சத்திர நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்தவகையில் கன்னட சூப்பர்ஸ்டாரான சிவராஜ்குமார் இந்த விழாவில் கலந்துக் கொண்டார். அவரை ரவி மோகன் மரியாதையுடன் வணங்கி காலில் இழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் விழாவில் எஸ்.ஜே சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டனர். அப்போது சிவகார்த்திகேயன் கூறியதாவது " தயாரிப்பாளராக இருந்தால் ஒரே விஷயம் நாம் எப்பொழுதும் சிரித்த முகத்துடனே இருக்க வேண்டும். மேலும் ரவி சார் ஓட இந்த முயற்சியில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் உருவாகும். அவருடைய பேனரில் நானும் ஒரு திரைப்படம் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது" என கூறினார்.


