TamilsGuide

பலுசிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் - 9 பாகிஸ்தான் வீரர்கள் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

நேற்று, வாஷுக் மாவட்டத்தில், உள்ளூர் காவல் நிலையம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை முகாம்கள் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்புப் படையினர் கடந்து சென்றபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது. இந்தத் தாக்குதலில் ஒன்பது வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்" என்று தெரிவித்தார்.

பலுசிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில், கராச்சியில் இருந்து குவெட்டாவுக்குச் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் மூன்று பயணிகள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

கில்லா அப்துல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தையிலும் குண்டு வீசப்பட்டது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். 
 

Leave a comment

Comment