யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டிப்பர், கூலர் வாகனம், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்திருந்த காரும் – யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர், கூலர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன இவ்வாறு ஒன்றோடு ஒன்று மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் 35வயதுடைய நபர் உயிரிழந்துள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


