50 லட்சம் ரூபாய் பெறுமதியான திமிங்கலத்தின் வாந்தி எனப்படும் அம்பர் கிரிஸை (Ambergris) வைத்திருந்த குற்றச்சாட்டியில் நபர் ஒருவரை திவுலபிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து திவுலபிட்டிய – நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன பகுதியில் நேற்று (10) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த குறித்த நபரிடமிந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 200 கிராம் அம்பர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாரின் விசாரணையில் சந்தேக நபர் வத்துருகம, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 44 வயதானவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலபிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


