ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீத வரிகளை விதித்துள்ளார் என்பது தெரிந்ததே.
ரஷியாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை எப்படியாவது தடுக்க டிரம்ப் முயற்சித்தபோதும் இந்தியா-ரஷியா நட்புறவைப் பாதிக்கவில்லை.
ரஷிய அதிபர் புதின் விரைவில் இந்தியாவுக்கு வருகை தருவார். இதை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். தோவல் தற்போது மாஸ்கோவில் உள்ளார்.
புதினின் இந்திய வருகைக்கான தேதிகள் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், அவரது இந்திய வருகை இந்த வருட இறுதிக்குள் நடைபெற வாய்ப்புள்ளது என்று அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் நேற்று இந்தியாவின் மீதான வரிகளை மேலும் 25 சதவீதம் அதிகரித்தது உத்தரவிட்டார். இதற்கு ஒரு நாளுக்குள், புதினின் இந்திய வருகை பற்றிய செய்தி சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியது.
இதற்கிடையே ஆகஸ்ட் 31ம் தேதி பிரதமர் மோடி சீனாவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.


