அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் ஒருமுறை அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட், உலகெங்கிலும் உள்ள பல மோதல் மண்டலங்களில் பல அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் போர் நிறுத்தங்களுக்கு டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறினார்.
டொனால்டு டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியுள்ளார். குறிப்பாக டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியுள்ளார். அதனால்தான் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று லெவிட் தெரிவித்தார்
இந்நிலையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இதை வெள்ளை மாளிகையிடம் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.


