TamilsGuide

ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி - லிதுவேனியா பிரதமர் திடீர் ராஜினாமா

ஐரோப்பிய பால்டிக் பகுதியில் உள்ள நாடு லிதுவேனியா. பழைய சோவியத் யூனியன் நாடான இங்கு கடந்த ஆண்டு அக்டோபரில் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு சமூக ஜனநாயகக் கட்சியின் ஜின்டாடஸ் பலுக்காஸ் பிரதமராக தேர்வானார்.

இதற்கிடையே, பிரதமர் ஜின்டாடாஸ் பலுக்காஸ், தனது மைத்துனியின் நிறுவனத்துடனான வணிக பரிவர்த்தனைகள் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதனால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டு எதிரொலியாக பிரதமர் பலுக்காஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த தகவலை லிதுவேனியா அதிபர் கீதானாஸ் நவுசேடா தெரிவித்தார்.

இதுதொடர்பாக பலுக்காஸ் கூறுகையில், முறையற்ற வணிக உறவுகள் உள்ளன. கடந்த கால தவறுகளால் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment