TamilsGuide

நாளுக்கு நாள் வசூலில் பட்டையை கிளப்பும் மகாவதார் நரசிம்மா

அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மஹா அவதார் நரசிம்ஹா கடந்த வாரம் வெளியானது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகாலாதனின் கதையாகும்.

திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. திரைப்படம் முதல் நாள் வசூலாக 1.75 கோடி, 2 ஆம் நாள் 4.6 கோடி, 3-வது நாள் 9.5 கோடி ரூபாய் மற்றும் 4-5 ஆம் நாளில் 13.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மொத்தம் திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் அதிகம் வசூலிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படத்தின் நல்ல வரவேற்பை முன்னிட்டு திரைப்படம் இலங்கை, ஆஸ்திரேலயா, மலேசியா மற்றும் யூரோப் ஆகிய மாநகரங்களில் இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிக்க சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த சினிமாடிக் யூவிவெர்ஸ் விஷ்ணுவின் 10 அவதாரங்களை படமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். 2025 முதல் 2037 ஆண்டுகள் மத்தியில் இப்படங்கள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment