TamilsGuide

ஆஸ்கார் விருது பெற்ற No other land படத்தில் பணியாற்றிய சமூக ஆர்வலர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளரால் சுட்டுக் கொலை

 பாலஸ்தீன ஆர்வலரும் ஆசிரியருமான அவுடா ஹாதெலின், ஆஸ்கார் விருது பெற்ற "நோ அதர் லேண்ட்" திரைப்படத்தில் பணியாற்றியதன் மூலம் அறியப்பட்டவர் ஆவார்.

இந்நிலையில் அவுடா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரான் மலைகளுக்கு அருகிலுள்ள உம் அல்-கைர் கிராமத்தில் திங்கள்கிழமை, இஸ்ரேலிய குடியேற்றக்காரரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

"எனது அன்புத் தோழர் அவுடா கொலை செய்யப்பட்டார்" என்று நோ அதர் லேண்டின் இணை இயக்குநர் பாசில் அட்ரா இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

ஹதலினின் கொலை ஹெப்ரோனுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு கரையில் ஆயுதம் ஏந்திய இஸ்ரேலியர்களின் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அக்டோபர் 2023 இல் இருந்து, கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்கு கரையில் இஸ்ரேலிய படைகள் மற்றும் குடியேற்றக்காரர்களால் குறைந்தது 964 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment