TamilsGuide

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த பயணி டிரம்புக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு

ஸ்காட்லாந்து லூட்டனில் இருந்து கிளாஸ்சோலுக்கு ஈசிஜெட் பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் பின்புற இருக்கையில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென எழுந்து விமானத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டு உள்ளது என சத்தம் போட்டார். மேலும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் கோஷமிட்டார்.

இதனால் சக பயணிகள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். உடனே சக பயணிகள் மற்றும் பணியாளர்கள் அவரை விமானத்துக்குள்ளேயே மடக்கி பிடித்தனர். உடனே அந்த விமானம் தரை இறக்கப்பட்டது. பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

விமான நிலையத்தில் தயாராக காத்திருந்த வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் ரகளையில் ஈடுபட்ட பயணியை கைது செய்தனர். மேலும் விமானம் மற்றும் அவர் கொண்டு வந்த பைகளையும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. அவர் புரளியை கிளப்பியது தெரியவந்தது. 41 வயதான அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்காட்லாந்தில் டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு எதிராக எடின்பரோவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஸ்காட்லாந்தில் நடுவானில் விமானத்தில் டிரம்புக்கு எதிராக பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 

Leave a comment

Comment