நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி, இன்று (24) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஜீப் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பான நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை, முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் அவரது கணவர் விரைவில் சரணடையாவிட்டால், அவர்களது சொத்துக்களை முடக்க நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்திருந்தனர் .
இதனுடன் தொடர்புடைய வழக்கில், கைதுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் தற்போது நீதிமன்றம் மூலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


