சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் அவரது கணவருடைய சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் அவரது கணவர் விரைவில் சரணடையாவிட்டால், அவர்களது சொத்துக்களை முடக்க நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்படுமென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அவர்கள் தங்கியிருக்கலாம் எனக் கூறப்படும் பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் எந்த இடங்களிலும் இருப்பது உறுதியாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த வழக்கில் சந்தேகேநபர்களாக கருதப்படும் இருவரும் விரைவில் கைதுசெய்யப்பட உள்ளதாக விசாரணை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றதுடன்
இதனுடன் தொடர்புடைய வழக்கில், கைதுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் தற்போது நீதிமன்றம் மூலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


