பிரபல இந்தி நடிகர் சோனு சூட், தான் வசிக்கும் வீட்டு வளாகத்திற்குள் வந்த ஒரு பாம்பை வெறும் கைகளால் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்ட அவர், அது ஒரு ஜெர்ரிபோட்டு வகை பாம்பு என்றும், அது விஷத்தன்மை வாய்த்தது அல்ல என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பாம்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடிக்க நிபுணர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்றும் தான் செய்ததை பின்பற்ற வேண்டாம் என்றும் எச்சரித்தார். சோனு சூட் தமிழில் நெஞ்சினிலே, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


