ஈரானின் ஷிராஸ் நகரில் நடந்த சாலை விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழநதனர். மேலும் 34 பேர் காயமடைந்தனர்.
ஷிராஸ், ஃபார்ஸ் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்த விபத்து இன்று (ஜூலை 19) காலை 11:05 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 55 பேரை ஏற்றிச்சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


