TamilsGuide

யாழில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 90 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து மூவரையும் கைது செய்த பொலிஸார் , அவர்களை குருநகர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a comment

Comment