TamilsGuide

1.3 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

கல்பிட்டி பகுதியில் மூன்று டிங்கி படகுகள் மற்றும் 1.3 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சட்டவிரோத போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே குறித்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதது.

இதேவேளை, கைப்பற்றபட்ட போதை மாத்திரைகளின் மொத்த பெறுமதி 1.3 மில்லியனுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் 22 முதல் 44 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவர்கள் முகத்துவாரம், குரக்கன்ஹேன, வன்னிமுந்தல், சின்ன குடியிருப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் , போதை மாத்திரைகள் மற்றும் மூன்று டிங்கி படகுகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்களத்தின் விசேட பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment