TamilsGuide

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

காணி மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஹர நீதவான் நீதிமன்றத்தின் பிரதான நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் பிரசன்ன ரணவீர இன்று (14) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று பிரசன்ன ரணவீர சமர்ப்பித்த பிணை மனுவையும் நீதவான் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment