இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தன்னை கைது செய்வதற்கு முன்னதாக, தன்னை முன் பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன் பிணை கோரிக்கை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு மனு அனுப்ப உத்தரவிட்டார். இதன்படி, 18ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு கேட்டுக் கொண்டார்.


