TamilsGuide

எலான் மஸ்க்கின் எக்ஸ் சிஇஓ லிண்டா யாக்காரினோ ராஜினாமா..!

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். பின்னர் டுவிட்டர் பெயரை எக்ஸ் (X) என மாற்றினார். கடந்த 2023ஆம் ஆண்டு மூத்த விளம்பர நிர்வாகியான லிண்டா யாக்காரினோவை சிஇஓ-வாக நியமித்தார்.

சுமார் இண்டு வருடம் பணியாற்றிய நிலையில், லிண்டா தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா செய்த அவர் "எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் xAI (Chatbot Grok உருவாக்கிய நிறுவனம்) உடன புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்த எக்ஸ் இன்னும் சிறந்ததை எட்டவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment