TamilsGuide

சிலாபம்- புத்தளம் வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்து

சிலாபம்- புத்தளம் வீதியில், தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (04) பகல் 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பேருந்து, பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்தது.

இந்த விபத்து காரணமாக, சிலாபம் – புத்தளம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment