TamilsGuide

குவாட் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு - மார்கோ ரூபியோ, ஜெய்சங்கர் பங்கேற்பு

குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு ஜூலை ஒன்றாம் தேதி நடைபெறும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

இதுதொடர்பாக, வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட், மாநாட்டில் பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு வாஷிங்டனில் இன்று தொடங்கியது. இதில் அமெரிக்கா சார்பில் மார்கோ ரூபியோ, இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஜப்பான் சார்பில் வெளியுறவு மந்திரி டகேஷி இவாயா மற்றும் ஆஸ்திரேலியா வெளியுறவு மந்திரியும் கலந்து கொண்டனர்.

Leave a comment

Comment