TamilsGuide

சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தேரர் உட்பட மூவர் கைது

ஹசலக பொலிஸ் பிரிவில் அம்பகஹபெலெஸ்ஸ பகுதியில் பழங்கால பொருட்களை பெறும் நோக்கில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேரர் ஒருவர் உட்பட சந்தேகநபர்கள் 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹசலக பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்படி பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய கல்வடுகொட பிரதேசத்தைச் சேர்ந்த தேரர் ஒருவரும் 39, 64 வயதுடைய செவனகல மற்றும் அம்பகஹபெலெ​ஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஹசலக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
 

Leave a comment

Comment