TamilsGuide

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் இணை நிறுவனர் உயிரிழப்பு

பாலஸ்தீனத்தின் காசாமுனை மீதான இஸ்ரேலின் போர் 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது. இதில் குழந்தை கள், பெண்கள் உள்பட 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் காசாவின் சப்ரா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இணை நிறுவனர் ஹகாம் முகமது இசா அல்-இசா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்தியதில் அல்-இசா முக்கிய பங்கு வகித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

இதற்கிடையே காசாவுக்கு செல்லும் நிவாரண பொருட்களை இஸ்ரேல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் காசா மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 66 குழந்தைகள் இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்களை அழிப்பதற்காக பட்டினியை ஒரு ஆயுதமாக வேண்டுமென்றே இஸ்ரேல் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினர்.

காசா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அபாயகரமான விகிதத்தில் அதிகரித்து வருவதாக சமீபத்தில் ஐ.நா. குழந்தைகளுக்கான நிறுவனம் எச்சரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment