TamilsGuide

கீவ் நகர் மீது பயங்கர தாக்குதல் - ரஷியாவுக்கு இன்னும் அதிகமான அழுத்தம் கொடுக்க வேண்டும்- ஜெலன்ஸ்கி

உக்ரைன்- ரஷியா இடையில் 3 வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு பக்கமும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் அதிபர் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் ரஷியா போர் நிறுத்தத்தை விரும்பவில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுக்க உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷியா சம்மதம் தெரிவித்தது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் ஏற்படவில்லை.

பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும், மறுபக்கம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் உயிரிழந்த நிலையில், 142 பேர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட ரஷியாவுக்கு உலக நாடுகள் இன்னும் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

"இந்த தாக்குதல் ரஷியா போர் நிறுத்தத்தை நிராகரித்து, கொலையை தேர்வு செய்கிறது என்பதை உலகிற்கு ஞாபகப்படுத்துகிறது" என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், போரின் உண்மையான இழப்பை உணர ரஷியாவு்ககு நெருக்கடி கொடுக்க தயாராக இருப்பதாக கூறிய ஆதரவு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment