TamilsGuide

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களை எந்த நேரத்திலும் அழைத்து வர தயார் – அரசாங்கம்

போர் சூழ்நிலை காரணமாக விசேட தேவை ஏற்பட்டால், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாகவும், எல்லையோர நாடுகள் வழியாக இலங்கையர்களை மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் இன்று (19) உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

சமூக ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
 

Leave a comment

Comment