TamilsGuide

வவுனியாவில் வீடொன்றில் இருந்து 10 கிலோ கஞ்சா மீட்பு

வவுனியாவில் வீட்டில் மறைந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது வவுனியா, கதிரவேல்பூவரசங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 10 கிலோ கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதுடன், 45 வயதுடைய சந்தேகேநபரையும் கைது செய்து ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 

Leave a comment

Comment