TamilsGuide

இந்திய முதலீட்டாளர்களை கொழும்பு பங்குசந்தைக்குள் உள்வாங்க திட்டம்

எதிர்காலத்தில் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களை கொழும்பு பங்குச்சந்தைக்குள் உள்வாங்குவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, எதிர்காலத்தில் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களை கொழும்பு பங்குச்சந்தைக்குள் உள்வாங்குவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் , இந்த நடவடிக்கையானது இலங்கை இந்திய பொருளாதார உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் அமையப்பெறும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதனால் பிராந்தியத்தில் ஒற்றுமை மேலும் பலப்படும் எனவும் இலங்கைக்கு இந்தியா அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு வழங்குவது நெருங்கிய நட்பு நாடு என்ற ரீதியிலேயே நாம் மேற்கொண்டுள்ள இந்த புதிய திட்டம் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மேலும் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment