TamilsGuide

ரொரன்ரோ வணிக வளாகத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா - தமிழ் இளைஞன் ஒருவர் கைது

கனடாவில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்த தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொரன்ரோவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் திகதி வணிக வளாகத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையின் சுவருக்கு அடியில் கையடக்க தொலைபேசி வைத்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன் பின்னர் பொலிஸார் கடைக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான ஜெரோன் நித்தியானந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டார்.

உடை மாற்றும் அறையில் இருந்தவரை நோக்கி அந்த கையடக்க தொலைபேசி காணப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் யோர்க் பிராந்திய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து 30 வயதுடைய தமிழர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னடுக்கப்படுள்ளது. 
 

Leave a comment

Comment